Tuesday, July 12, 2005

நாட்டுப்புறப் பாடல்கள் - 4

சின்ன குழந்தைகள் அந்த நாளில் புது ஆடை அணிந்து கொண்டு, திருவிழாக் காலங்ளில் கோலாட்டம் ஆடிக்கொண்டு பாடும் பாடல்...

கோலு கோலு கோலு

கோலு கோலு கோலு கோலு கோலு கோலுன
கோலு வீசி ஆட ரம்ம நாடி வருக நீ

கட்டின உரலோடு தவழ்ந்து கண்ணன் வருகவே
மகா காட்சி பெருகவே

காட்சி பெருகி கோகுலந்தனில் தாட்சி நாயகா
பெண்ணே சாட்சி நாயகா

நாயகன் வந்து நடுமரத்திலே நடுவிலே நுழைய
மரம் கிடு கிடுனு அசைய

அசையும் கிருஷ்ணன் விசையை தூக்கி அம்பரம் தனிலே
சுற்றும் பம்பரம் போலே

பம்பரம் போல் சுழற்றி எறிந்த எம்பெருமானே
சுற்றும் தம்புடு கிரி

தம்புடு கிரி வாசுதேவ கருட வாகன
பெண்ணை திருடும் மோகனா

மோகன மணி வாரன மணி முத்தம் தராயோ
பெண்ணே கிட்ட வாராயோ

வாராயோ வாராயோ வதன கோபாலா
பெண்ணே கிஜன கோபாலா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home